James Vasanth Music Director and former Vijay TV Anchor on Sanam!
THE LONE TIGRESS
சனம் வாக்களிப்பால் வெளியேறினாரா? திட்டமிட்டு அனுப்பப்பட்டாரா?
இது எல்லார் மனதிலும் எழுந்திருக்கிறக் கேள்வி!
பலருக்கு சந்தேகமே இல்லை.. இது சதிதான் என்று அடித்துச் சொல்கிறார்கள்.
நான் பார்த்த, விசாரித்த, ஆய்வுசெய்த வகையில் அவருக்கு மக்களிடம் பெருத்த ஆதரவு இருக்கிறது என்பது மட்டும் தெளிவாகியது. பின் ஏன் அனுப்பப்பட்டார்? என்ன காரணம்? தயாரிப்பாளர்களுக்கு என்ன வியூகம், நோக்கம் என்பது விளங்கவில்லை.
ஆனால், அவர் எப்படி பெரும்பான்மை பார்வையாளர்களைக் கவர்ந்தார் என்பதுதான் என் கண்ணோட்டம்.
தொடக்கத்தில் நான் இந்நிகழ்ச்சியைப் பார்க்காததால் எனக்கு ஆரம்ப நிகழ்வுகள் தெரியாது. ஆனால் மக்களால் அவர் வெறுக்கப்பட்டார், சண்டைக்காரி என்கிற சாயல் அவர்மேல் படிந்தது என்பதை மட்டும் விளங்கிக்கொண்டேன்.
ஆனால் வாரங்கள் போகப்போக, அவருடைய நிலைப்பாடு மக்களுக்கு விளங்கத் தொடங்கியது.
- நிலையான போக்கைக் கொண்டவராயிருந்தார்.
- எத்தனை பேர் எதிர்த்து நின்றாலும், துணிவுடன் உறுதியாகத் தன் கருத்துகளை நிதானமாக வாதாடினார்.
- வாதங்களில் தெளிவும், கண்ணியமும் இருந்தது. யாரையும் தவறான வார்த்தைகளில் பேசியதில்லை.
- ஒரு குறிப்பிட்ட வாதத்தில், பாலாஜி மூர்க்கத்தனமாக நெருங்கி வந்து (ஆணென்கிற ஆணவத்துடன்) மிரட்டியபோதும் சற்றும் சளைக்காமல் அதே நிதானத்துடன் எதிர்கொண்டார்.
- கடைசியாக நடந்த 1 - 13 இடங்களுக்கான வாதத்தின்போது கூட, வயதில் மூத்த இவரை பாலாஜி நீ, வா, போ என்று அழைக்க, இவர் இறுதிவரையில் பாலாஜியை நீங்க, வாங்க, போங்க என்றுதான் விவாதித்தார். Gabriela பாலாஜியை அவன், இவன் என்பதை நினைவில் கொள்ளவும்.
- தேவையில்லாமல் மற்றவரைப் பகைத்துக்கொள்ளவேண்டாம் என்று (அங்கிருக்கிற சிலரைப் போல இல்லாமல்) ஒருபோதும் தன் கருத்துகளைப் பொது சர்ச்சைகளில் சொல்லாமல் இருந்ததில்லை. ஆனால் அமைதியாக வேறுபட்டார்.
- அர்ச்சனா gang இவரை ஒட்டுமொத்தமாகக் குறிவைத்து விளையாடியபோதும் அசராமல் தனிப்புலியாகப் திரிந்தார்.
- எல்லாவற்றுக்கும் சிகரமாக, வீட்டிலிருந்து வெளியேறியபோது அப்படி ஒரு முதிர்ச்சியுடனும், புன்சிரிப்புடனும் எல்லாருடனும் கலகலத்துவிட்டு நடந்தார்.
- இதுவரை வெளியேறிய எல்லாரும் கமலுடன் மேடையில் நின்று ஒவ்வொருவரையும் பற்றிக் கருத்து சொல்லும்போது தங்கள் கோபத்தையும், வன்மத்தையும் காட்டியதுதான் வழக்கம். இவர் எல்லாரிலும் இருந்து வேறுபட்டு, தனித்துவத்துடன், ஏகப்பட்ட மனமுதிர்ச்சியுடன் அவர்களது நேர்மறைப் பக்கங்களைப் பாராட்டியும், எதிர்மறைப் பக்கங்களைப் பக்குவமாக எடுத்துச் சொல்லியும் உயர்ந்து நின்றார்.
அவருக்கு வாக்களிக்காதவர் உள்ளங்களையெல்லாம் நேற்றிரவு அள்ளிச்சென்றார்.
FB Link below!
https://m.facebook.com/story.php?story_fbid=10223496710262044&id=1117388547&sfnsn=wiwspmo
comment:
p_commentcount